உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 10, 2010

வளரிளம் பெண்களுக்கான விழிப்புணர்வுதிறன் வளர்ப்பு பயிற்சி பரிசளிப்பு விழா

கிள்ளை: 

                  சிதம்பரம் அருகே கிள்ளை ஏக்தா நம்பிக்கை மையத்தில் 5 நாட்கள் நடந்த விழிப்புணர்வு முகாமில் பரிசளிப்பு விழா நடந்தது. சிதம்பரம் அடுத்த கிள்ளை ஏக்தா நம்பிக்கை மையத்தில் குழந்தைகள், பெண்கள் மற்றும் வளரிளம் பெண்களுக்கு விழிப்புணர்வு மற்றும் திறன் வளர்ப்பு குறித்த 5 நாட்கள் இலவச சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. நிறைவு நாளான நேற்று நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் மைய ஒருங்கிணைப்பாளர் தமிழ்மணி தலைமை தாங்கினார்.  களப்பணியாளர் கவிதா வரவேற்றார். புதுச்சேரி ஆரோவில் சக்தி இல்லம் ஒருங்கிணைப்பாளர் சரஸ் வதி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் சிவகுமாரவேல் ஆளுமை திறன் குறித்துப் பேசினார்.மதுரை ஏக்தா நிர்வாகி பிம்லா சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று முதல் மூன்று இடங்களை பிடித்த குழந்தைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற 74 குழந்தைகளுக்கு பங்கேற்றதற்கான பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஏக்தா செஸ்வி மைய பணியாளர்கள் பபிதா, கவுசல்யா, ஜெயக்குமாரி, ரேகா உள் ளிட்ட விழாக் குழுவினர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior