உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 10, 2010

சாலை அகலப்படுத்தும்போதுடெலிபோன் கேபிள் துண்டிப்பு

சிதம்பரம்: 

                 சிதம்பரத்தில் சாலை அகலப்படுத்தும்போது தொலைபேசி கேபிள் துண்டிக்கப்பட்டு காணாமல் போனதால் இரு நாட்களாக பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.
 
                 சிதம்பரம் வடக்கு மெயின்ரோட்டில் சாலை அகலப்படுத்த பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டினர். அப்போது தொலைபேசி கேபிள் துண்டிக்கப் பட்டது. துண்டிக்கப்பட்ட சுமார் 10 அடி நீள கேபிளும் திருட்டு போனது.கேபிள் துண்டிப்பால் வடக்கு மெயின் ரோடு சுற்றுபுற பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட நுகர்வோர் பாதிக்கப் பட்டனர். இது குறித்த பல்வேறு புகார்களின் பேரில் நேற்று தொலைபேசித்துறை ஊழியர்கள் வெயிலையும் பொருட்படுத்தாது தொலை பேசி இணைப்பை அதிரடியாக சரி செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior