உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 10, 2010

கைவினைப் பொருள் கண்காட்சி

கடலூர்: 

              உத்தரபிரதேச மாநில கைவினைப் பொருள் கண்காட்சி கடலூர் டவுன்ஹாலில் நடக்கிறது. உத்தரபிரதேச மாநில கைவினை மற்றும் சிற்பக் கலைஞர்கள் சங்கம் சார்பில் 'கலாஞ்சலி கிராப்ட் பஜார்-2010' கடலூர் டவுன்ஹாலில் கடந்த 6ம் தேதி முதல் நடக்கிறது. கண்காட்சியை கடலூர் சேர்மன் தங்கராசு துவக்கி வைத்தார். கண்காட்சியில் மரம், பித்தளையால் ஆன வீட்டு உபயோகப் பொருட்கள், கலை நய மிக்க சிற்பங்கள், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கைத்தறி சேலைகள், சுடிதார், படுக்கை விரிப்புகள், பீங்கான் பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் 10 ரூபாய் முதல் 22 ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அனைத்து பொருட்களுக்கும் 10 சதவீதமும், கைத்தறி துணிகளுக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. கண்காட்சி வரும் 25ம் தேதிவரை காலை 10 முதல் இரவு 9 மணிவரை நடக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior