உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 10, 2010

குடிசை வீடு கணக்கெடுப்பு மேல் முறையீடு செய்யலாம்

பண்ருட்டி: 

                பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்தில் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் 19 ஆயிரம் வீடுகள் கணக்கெடுப்பு நடந்துள்ளது. விடுபட்டவர்கள் மேல் முறையீடு செய்ய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 'கான்கிரீட்' வீட்டு வசதி திட்டத்தின்கீழ் ஒவ்வொரு ஊராட்சியிலும் வி.ஏ.ஒ., ஊராட்சி உதவியாளர், மக்கள் நலப்பணியாளர் அடங்கிய குழுவால் கூரை வீடுகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது. இதில் 42 ஊராட்சிகளில் 19 ஆயிரம் கூரை வீடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. தற்போது மேலாய்வு பணி துவங்கி 18 ஊராட்சிகளில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் முடித்துள்ளனர் .இதுகுறித்து பண்ருட்டி ஒன்றியத்தில் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பின் போது விடுபட்டவர்கள் அனைவரும் தங்களது மேல்முறையீட்டை பண்ருட்டி பி.டி.ஒ., விற்கு தெரிவிக்கலாம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior