உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 10, 2010

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

விருத்தாசலம்: 

               விருத்தாசலம் பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என நுகர்வோர் பேரவை சார்பில் கலெக்டருக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் செந்தமிழ்செல்வன் கலெக்டர் சீத்தாராமனுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில்:
 
                   விருத்தாசலம் பஸ் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கில் பொது மக்கள், மாணவர்கள் வந்து செல்கின்றனர். பஸ் நிலையம் சுகாதார சீர்கேடு அடைந்து உள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். பஸ் நிலையத்தில் உள்ள கடைகாரர்கள் வரையறுக்கப்பட்ட இடத்தை விட கூடுதலாக ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளனர். இதனால் மழை காலங்களில் பொதுமக்கள் நிற்க இடமின்றி மழையில் நனையும் நிலை உள்ளது.இலவச கழிவறை கட்டடம் பராமரிப்பின்றி கிடப்பதால் பொதுமக்கள் அதிக காசு கொடுத்து கட்டண கழிவறைக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே கலெக்டர் விருத்தாசலம் பஸ்நிலையத்தை நேரில் வந்து பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior