உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 10, 2010

வெளிமாநில வாகனங்கள் மீது வழக்குப் பதிவு

சிதம்பரம்:

                              சிதம்பரம், அண்ணாமலைநகர் பகுதியில் வெளிமாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு இயக்கப்படும் வாகனங்களை போலீஸôர் பிடித்து வழக்குப் பதிவு செய்து வருகின்றனர். மேலும் தமிழக சாலை வரியை செலுத்த நோட்டீஸ் அளித்தும் மற்றும் அபராதமும் விதிக்கப்படுகிறது. இதனால் அண்ணாமலைப் பல்கலையில் பயிலும் வெளிமாநில மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உத்திரபிரதேசம், ஜார்கண்ட், உத்திராஞ்சல், கேரளம், ஆந்திரம், கர்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது சொந்த ஊரிலிருந்து வாகனங்களை எடுத்து வந்து தங்கி பயின்று வருகின்றனர். இவர்களது வாகனங்களை போலீஸôர் பிடித்து வழக்கு பதிவு செய்வதால் அம்மாணவர்கள் மிகவும் அவதியுற்றுள்ளனர். எனவே அண்ணாமலைப் பல்கலையில் பயிலும் வெளி மாநில மாணவர்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்டுக்கு பல்கலைக்கழக செனட் உறுப்பினரும், மனிதநேய தொண்டு இயக்கத் தலைவருமான தில்லை.சீனு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior