உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 10, 2010

சுற்றுலா பயணிகளை கவரும் நுங்கு சர்பத்

கிள்ளை: 

                 கோடை வெயிலின் தாக்கத்தை தீர்க்கும் வகையில் கிள்ளைப் பகுதியில் வெள்ளரி பிஞ்சுடன் கூடிய நுங்கு சர்பத்திற்கு மவுசு கூடியுள்ளது. சிதம்பரம் அருகே கிள்ளைப் பகுதியில் கோடை வெயிலின் தாக் கத்தை குறைக்கும் வகையில் நுங்கு விற்பனை அதிகரித்துள்ளது. பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் கிள்ளை சுற்றுப் பகுதியில் அதிகளவில் பனை மரங்கள் இருப்பதால் தற்போது கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் நுங்கு விற்பனை சூடுபிடித்துள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு விருந்தாக வெள்ளரிப்பிஞ்சு, நுங்கில் தயாரிக்கப்பட்ட சர்பத் திற்கு மவுசு கூடியுள்ளது. தற்போது 100 மிலி அள வுள்ள நுங்கு சர்பத் 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த சர்பத் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்ந்துள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior