உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 10, 2010

கோவில் கலசம் திருட்டுநான்கு பேர் கைது

நெல்லிக்குப்பம்: 

                   நெல்லிக்குப்பம் அருகே கோவில் கலசத்தை திருடிய நால்வர் கைது செய்யப்பட்டனர். நெல்லிக்குப்பம் அடுத்த தோட்டப்பட்டு திரவுபதி அம்மன் கோவிலில் கடந்த 7ம் தேதி இரவு கலசத்தை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றனர். இதுகுறித்து ஊராட்சி தலைவர் கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர்.

                       இந்நிலையில் நெல்லிக்குப்பம் குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், ஏட்டு சந்திரசேகர், சங்கர் ஆகியோர் உண்ணாமலை செட்டி சாவடி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே சந்தேகப்படும்படியாக வந்த இருவரிடம் விசாரித்தனர். அதில் வன்னியர்பாளையம் சங்கர் (31), கொடுக்கன்பாளையம் பாலமுருகன் (32) எனவும் தோட்டப்பட்டு கோவில் கலசம் திருடியவர்கள் எனவும் தெரியவந்தது. மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தோட்டப்பட்டு ரமேஷ் (26), பெத்தாங்குப்பம் ஆறுமுகம் (31) ஆகியோரையும் கைது செய்து அவர்கள் பயன்படுத்திய மோட்டர் பைக், ஸ்கூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior