உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 10, 2010

ரயில் மோதி வாலிபர் பலி

பரங்கிப்பேட்டை:

              பரங்கிப்பேட்டை அருகே ரயில்வே பாதை ஓரம் நடந்து சென்ற வாலிபர் ரயில் மோதி இறந்தார். பரங்கிப்பேட்டை அடுத்த அரியகோஷ்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் முருகன் (32). நேற்று இரவு பரங்கிப்பேட்டை ரயில்வே பாதையோரம் நடந்து சென்றார். எஸ்.பி.மண்டபம் அருகே செல்லும் போது மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் சென்ற பயணிகள் ரயில் முருகன் மீது மோதியது. படுகாயமடைந்த முருகன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். இதுகுறித்து சிதம்பரம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior