உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 10, 2010

பள்ளிகளில் கட்டணம் நிர்ணயம் இன்று அரசாணை வழங்கப்படுகிறது

கடலூர்: 

            தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரம் குறித்த ஆணை இன்று மதியம் வழங்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அமுதவல்லி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அமுதவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

                தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் வசூலிக்க வேண்டிய கட்டணம் குறித்து தமிழக அரசு நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான கட்டண நிர்ணயக் குழு சமீபத்தில் வெளியிட்டது. இந்த கட்டண நிர்ணய ஆணையின் நகல் மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று மதியம் 2 மணிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. இந்த கட்டண விகிதத்தில் ஆட்சேபனை இருப்பின் 15 தினங்களுக்குள் மனு கொடுக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior