உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 10, 2010

கர்ப்பிணி பெண்களுக்கு திருமண உதவித் தொகை

சிறுபாக்கம்: 

                  நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 141 கர்ப்பிணி பெண்களுக்கு 2 கோடியே 82 லட் சம் ரூபாய்க்கான திருமண உதவித் தொகை வழங்கும் விழா நடந்தது.

              நல்லூர் ஒன்றியத்தில் மூவலூர் ராமாமிர்தம் திருமண நிதி உதவித் தொகை வழங்கும் விழா நடந்தது. ஒன்றிய வேளாண்மை குழு தலைவர் பாவாடை கோவிந்தசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர்கள் ரவிசங்கர் நாத், சுலோச்சனா முன்னிலை வகித்தனர். சமூக நல அலுவலர் தவமணி வரவேற்றார். 

விழாவில் ஒன்றிய தலைவர் ஜெயசித்ரா 141 பயனாளிகளுக்கு 2 கோடியே 82 லட்சத்திற் கான காசோலையை வழங்கி பேசுகையில் 

               'மூவலூர் ராமாமிர்தம் திருமண உதவி திட்டத்தின் மூலம் முதல்வர் கருணாநிதி உதவித் தொகை வழங்கி ஏழை பெண்களின் வாழ் வில் ஏற்றம் பெற செய்துள்ளார். தி.மு.க., ஆட்சியில் தான் கிராமங்கள் தன்னிறைவு பெற்றுள்ளது. பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய அதிகாரிகள் மக்களை தேடி வருகின்றனர்' என பேசினார். இதில் துணை ஆணை யர்கள் தண்டபாணி, வீரபாண்டியன், மாவட்ட கவுன்சிலர் தங்கதுரை, ஒன் றிய கவுன்சிலர்கள் சக்தி விநாயகம், வெங்கடாசலம், பன்னீர்செல்வம், ஒன் றிய அலுவலர்கள் ரவிச் சந்திரன், சாமிநாதன், பெரியநாயகி, நூர்ஜகான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior