உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 25, 2010

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் காப்பி: 34 மாணவர்கள் பிடிபட்டனர்

கடலூர்:
 
              எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் காப்பி அடித்ததாகக் கடலூர் மாவட்டத்தில் புதன்கிழமை 34 மாணவர்கள் பிடிபட்டனர். எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் புதன்கிழமை தமிழ் 2-ம் தாள் தேர்வு நடந்தது. இதில் காட்டுமன்னார்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் 9 மாணவிகள், லால்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மையத்தில் 3 மாணவர்கள், காட்டுமன்னார்கோயில் பி.ஆர்.ஜி. மேல்நிலைப் பள்ளி மையத்தில் 7 மாணவர்கள், உடையார்குடி ஆர்.சி. உயர்நிலப் பள்ளி மையத்தில் 12 மாணவர்கள், பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் 3 மாணவர்கள் காப்பி அடித்ததாகப் பிடிபட்டனர்.இவர்கள் அனைவரும் தனித் தேர்வர்கள். பறக்கும் படையினர் கண்காணிப்பின் போது இவர்கள் பிடிபட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior