உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 25, 2010

கூலியாட்கள் வராததால் வேர்க்கடலைஅறுவடை பாதிப்பு: விவசாயிகள் கவலை

கடலூர்:

                    வேர்க்கடலை அறுவடை செய்ய ஆட்கள் வராதததால் விவசாயிகள் தவித்து வருகின்றனர். எண்ணெய் வித்து பயிரான வேர்க்கடலை கடலூர் மாவட்டத்தில் மானாவாரியாகவும், இறைவையாகவும அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. மழைக்காலம் முடிந்து ஜனவரியில் சாகுபடி செய்த வேர்க்டலை தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளன.இதை அறுவடை செய்ய வரும் பெண்களுக்கு நாள் கூலியாக கொடுப்பதில்லை. வேர்க் கடலை செடியை பிரித்தெடுக்கும் அளவை பொறுத் துதான் கூலி வழங்கப்படுகிறது.

                 இந்த வேலை மிகவும் கஷ்டமில்லாமலும், வயதானவர்கள், சிறுவர்கள் கூட எளிமையாக செய்யலாம் என்பதால் ஏராளமானவர்கள் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுவது வழக்கம். தற் போது கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் பகுதியில் வேர்க்கடலை அறுவடை துவங்கியுள்ளது. கிராமப்புறங்களில் நடந்து வரும் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்ட பணிக்கு சென்றுவிடுவதாலும், பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நேரம் என்பதாலும் வேர்க்கடலை அறுவடை பணி பாதித்துள்ளது. ஒவ்வொரு நிலத்திலும் ஒரு சிலர் மட்டுமே அறுவடை பணியில் ஈடுபட்டுள்ளனர். அரை ஏக்கரில் பயிர் செய்துள்ள வேர்க்கடலை ஓரிரு நாளில் முடிய வேண்டிய அறுவடை தற்போது ஒரு வாரத்திற்கு மேலாகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior