உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 25, 2010

லாரி மீது மினிலாரி, கார் மோதல் ஒருவர் பலி: இருவர் படுகாயம்

சிறுபாக்கம்:

               தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது மினி லாரி மோதியதில் ஒருவர் இறந்தார். சென்னை செங்கல்பட்டு ராகவன் நகரை சேர்ந்தவர் தீனதயாளன் (40). இவர் தனது சகோதரர் ரவியுடன் சென்னையில் இருந்து திருச்சிக்கு மினி லாரியில் சென்றுக் கொண்டிருந்தார். வேப்பூர் அரசு மேல்நிலை பள்ளி அருகில் தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற இரும்பு கம்பி ஏற்றிய லாரி மீது மோதியது. அதில் மினிலாரியில் பயணம் செய்த தீனதயாளன் சம்பவ இடத்திலேயே இறந்தார். அதே லாரி மீது மற்றொரு கார் மோதியது. அதில் சென்னையை சேர்ந்த செல்வராஜ் மற்றும் சுரேஷ் இருவரும் படுகாயமடைந்தனர். இருவரும் ராமநத்தம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துகள் குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior