உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 25, 2010

கட்டட தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கடலூர்: 

                  கடலூரில் தமிழ் மாநில கட்டட தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடலூரில் உள்ள மாவட்ட தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சாமிதுரை தலைமை தாங்கினார்.

                           துணை செயலாளர் சேதுராமன் முன்னிலை வகித்தார். செயலாளர் அஞ்சாபுலி வரவேற்றார். மாநில தலைவர் நேரு சிறப்புரையாற்றினார். பொதுச் செயலாளர் சுப்பு, மாவட்ட மகளிரணி செயலாளர் நாகம்மாள், துணை செயலாளர் தவமணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் இலவச பதிவு மற்றும் புதுப்பித்தல் முறை மற்றும் தொழிலாளர் விரோத அரசாணைகளை உடன் ரத்து செய்ய வேண்டும். கட்டுமான தொழிலாளர் நல வாரியத்திற்கென தனி அலுவலகம் அமைக்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் பொதுவான சமூக பாதுகாப்பு எண் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தபபட்டன. முன்னதாக கட்டுமான தொழிலாளர்கள் பீச்ரோட்டிலிருந்து ஊர்வலமாக வந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior