உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 25, 2010

புழுதி பறந்த நெல்லிக்குப்பம் ரோட்டில் தார் சாலை அமைக்கும் பணி துவக்கம்


கடலூர்:

                 கடலூர் நெல்லிக்குப்பம் மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்த இடத்தில் நெடுஞ்சாலை துறையினர் சாலை அமைக்கும் பணியை துவக்கியுள்ளனர்.

                   கடலூர் நகராட்சி பகுதியில் 40.40 கோடி ரூபாய் மதிப்பிட்டில் பாதாள சாக்கடை பணிகள் துவங்கப்பட்டது. இந்த பணிக்காக கடலூர் நகரின் முக்கிய போக்குவரத்து மிகுந்த சாலையான நெல்லிக்குப்பம் ரோட்டில் சாவடி முதல் பொதுப்பணித்துறை அலுவலகம் வரை பள்ளம் தோண்டப்பட்டது.பைப்புகள் புதைத்த பின்னர் பள்ளத்தில் மணலை கொட்டி மூடாமல், தோண்டி எடுத்த மண்ணை கொட்டி மூடியதால் மழைக் காலங்களில் சாலைகள் சேறும் சகதியுமாகி வயல் வெளிபோல் காட்சி அளித்தது. லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்கள் பள்ளத்தில் சிக்கியதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதனைக் கண்டித்தும், சாலையை சீரமைக்கக் கோரி பொதுநல அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் பல போராட்டங்கள் நடத்தின. அதனைத் தொடர்ந்து கலெக்டர் தலைமையில் பொது நல அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு குறிப்பிட்ட காலத்திற்கு பாதாள சாக்கடை பணிகள் முடிக்கப்பட்ட இடங்களில் சாலை அமைக்கப்படும் என கலெக்டர் உறுதியாளித்தார்.

                      இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலை துறை சார்பில் கடலூர்-நெல்லிக்குப்பம் ரோடு, வண்டிப்பாளையம் ரோடு மற்றும் போடிசெட்டி தெரு, சஞ்சீவி நாயுடு தெரு ஆகிய பகுதிகளில் உள்ள ஐந்தரை கிலோ மீட்டார் தூர சாலையை சீரமைக்க 1.90 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதனையொட்டி தற்போது நெல்லிக்குப்பம் சாலை சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது. அதில் பாதாள சாக்கடை திட்ட குழாய் புதைத்த இடத்தில் உள்ள மண்ணை தோண்டி எடுத்து அகற்றிவிட்டு அதன் மீது ஜல்லி கொட்டி சாலை அமைக்கப்பட உள்ளது.இதேபோன்று வண்டிப்பாளையம் சாலை விரிவுப்படுத்தி சீரமைக்கும் பொருட்டு சாலையின் மேற்கு பகுதியில் பொக்லைன் கொண்டு பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior