ராமநத்தம்: 
                     தொழுதூர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரி யில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் துறையில் இறுதியாண்டு மாணவர்களுக்கு, அதே துறையை சேர்ந்த ஜூனியர் மாணவர்கள் பிரிவு உபசார விழா நடத்தி நினைவு பரிசு வழங்கினர். விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் ராஜபிரதாபன், இயக்குனர் மேஜர்குஞ்சிதபாதம், துணை முதல்வர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். துறைத்தலைவர் மணிகண்டன் வரவேற்றார். கல்லூரி தாளாளர் கிருஷ்ணசாமி நினைவு பரிசுகள் வழங்கி பேசினார். மாணவி சவுமித்ரா நன்றி கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக