உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 25, 2010

பெரியார் கல்லூரியில்காளான் வளர்ப்பு பயிலரங்கம்


கடலூர்: 

                      கடலூர் பெரியார் கல்லூரியில் விலங்கியல் துறை சார்பில் காளான் வளர்ப்பு மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் குறித்து பயிலரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் ரங்கநாதன் தலைமை தாங்கி, பயிலரங்கை துவக்கி வைத்து பேசினார். விலங்கியல் துறை பேராசிரியர் ஜெயந்திதேவி வரவேற் றார். புதுச்சேரி குருமாம்பேட்டை காமராசர் கிரிஷி விக்யான் கேந்தரா பேராசிரியர் விஜயலட்சுமி காளான் வளர்ப்பு குறித்து விளக்கினார். அண்ணா பல்கலை கழக விலங்கியல் துறைத் தலைவர் ராமலிங்கம் மண்புழு உரம் தயாரித்தல் குறித்து விளக்கினார். பின்னர் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பேராசிரியர்கள் சின்னதுரை, வினோதா, அருள்தாஸ், ராஜ்குமார், ஞானாம்பிகை ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் பழனிவேலு, கண்ணன் பங்கேற்றனர். ராஜாம் பாள் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior