உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 25, 2010

புவனகிரி பேரூராட்சி பஸ் நிலையம்'பார்க்கிங்' பகுதியாக மாறியது

புவனகிரி:

                    புவனகிரி பஸ் நிலையம் டாக்சி, கார் நிறுத்தமாக மாறியுள்ளதால் பயணிகள் சாலையில் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.புவனகிரியில் பேரூராட்சி சார்பில் பயணிகளின் வசதிக்காக 20 ஆண்டிற்கு முன்பு பஸ் நிலையம் கட்டப்பட்டது. இதன் மூலம் புவனகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயனடைந்து வந்தனர். பஸ் நிலையம் அருகே பொது நூலகம் அமைந்துள்ளது. இதன் மூலம் ஆண்களும், பெண்களும், பள்ளி மாணவர்களும் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் பொதுநூலகம் அருகில் டாஸ்மாக் மதுபானக்கடை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

               போதாக்குறைக்கு கார், ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்கள் தங்களது வாகனங்களை வரிசையாக நிறுத்தி பஸ் நிலையத்தை வாகன நிறுத்தமாக மாற்றிவிட்டனர்.இதனால் பஸ் பிடிக்க வரும் பயணிகள், நூலகத்திற்கு வரும் மாணவியர்கள் பஸ் நிலையத்தினுள் வந்து அமர்ந்து இளைப்பாரக்கூட முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மீண்டும் பஸ் நிலையம், பயணிகளுக்கு பயன்தரும் வகையில் மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior