உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 25, 2010

பரங்கிப்பேட்டையில் போக்குவரத்து நெரிசல்மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்ல கோரிக்கை


பரங்கிப்பேட்டை: 

              பரங்கிப்பேட்டை அருகே போக்குவரத்து நெரிசலை குறைக்க மாற்றுப்பாதை வழியாக வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண் டும் என கலெக்டருக்கு கோரிக்கை வைக்கப்பட் டுள்ளது.

இதுகுறித்து பரங்கிப்பேட்டை பேரூராட்சி துணை சேர்மன் செழியன், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:

                     சிதம்பரத்தில் இருந்து பரங்கிப்பேட்டைக்கு தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. அரசு அலுவலகங்கள், அரசு பள்ளிகள், தனியார் அலுவலகங்கள் என மக்கள் புழக்கம் அதிகமாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகமாகி வருகிறது. பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் பகுதியில் எதிரேவரும் வாகனம் தெரியாத அளவிற்கு வளைவுகள் உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. பரங்கிப்பேட்டையில் இருந்து சிதம்பரம் செல்லும் வாகனங்கள் அகரம் தேரோடும் வடக்குவீதி வழியாக சென்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கும். அதனால் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாற்றுப்பாதை வழியாக வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior