உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 25, 2010

தொலைபேசி ஊழியர்கள் 50 பேர் ரத்த தானம்


நெய்வேலி: 

                     நெய்வேலியில் தொலைபேசி ஊழியர் சங்கம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. இந்திய தொலைபேசி துறையின் ஊழியர் சங்கம் துவங்கிய 10ம் ஆண்டை முன்னிட்டு நெய்வேலி தொலைபேசி அலுவலக வளாகத்தில் ரத்த தான முகாம் நடந்தது. முகாமை என்.எல்.சி. பொது மருத்துவமனையின் முதன்மை பொது கண்காணிப்பாளர் டாக்டர் சண்முக சுந்தரம் தொடங்கி வைத்தார். சங்க உறுப்பினர்கள் 50 பேர் ரத்ததானம் வழங்கினர்.நிகழ்ச்சியில் தொலைபேசி துறையின் துணை பொது மேலாளர் சேகர், டாக்டர்கள் சுயம்பிரகாஷ், சண்முகக்கனி, பி.எஸ். என்.எல். அதிகாரிகள் ஜெயக்குமார், மன்மதன், ஊழியர் சங்க மாவட்ட பொறுப்பாளர்கள் மதியழகன், சம்பந்தம், கோவிந்தராஜலு, சுரேஷ்பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior