உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 26, 2010

ரயில் இன்ஜின் பழுது 4 மணி நேரம் தாமதம்

 கடலூர் : 

            ரயில் இன்ஜின் பழுதானதால் மயிலாடுதுறை - விழுப்புரம் பயணிகள் ரயில், நேற்று நான்கு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
 
             விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதை பணி நிறைவடைந்து கோர்ட் உத்தரவின்படி ரயில் இயக்கப்படுகிறது. முதல் கட்டமாக விழுப்புரம் - மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில் காலை 6.10 மணிக்கு விழுப்புரத்தில் புறப்பட்டு 9.50 மணிக்கு மயிலாடுதுறையை அடைகிறது. மயிலாடுதுறையில் 5.30 மணிக்கு புறப்படும் எண்.814 பாசஞ்சர் ரயில் விழுப்புரத்திற்கு 9.15க்கு சென்று சேரும். இந்த ரயில் இன்ஜின் பழுதானதால், மயிலாடுதுறையில் காலை புறப்படவில்லை. விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை சென்று சேர்ந்த ரயில் எண்.813  இன்ஜின் மாற்றப்பட்டு நான்கு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. அதனால், கடலூருக்கு 7.40 மணிக்கு வர வேண்டிய பாசஞ்சர் ரயில் 12 மணிக்கு வந்தது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior