உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 26, 2010

கால்நடை மருத்துவமனை திறப்பு

 கிள்ளை : 

         நக்கரவந்தன்குடியில் கால்நடை கிளை மருத்துவமனை திறக்கப்பட்டது. சிதம்பரம் அடுத்த நக்கரவந்தன்குடியில் கால்நடை மருத்துவமனை இல்லாமல் அப்பகுதி கால்நடைகளை பின்னத்தூர் அல்லது கவரப்பட்டு பகுதி மருத்துவமனைக்கு ஓட்டி சென்றனர். நக்கரவந்தன் சுற்றுப்பகுதியில் கால்நடை கிளை மருத்துவமனை துவங்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டதைத் தொடர்ந்து சிதம்பரம் கோட்ட கால் நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் தட்சணாமூர்த்தி பரிந்துரையின் பேரில் புதிய கால் நடை கிளை மருத்துவமனை அமைக்க அரசு சார்பில்  உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று 24ம் தேதி கிளை மருத்துவமனை துவக்க விழா நடந்தது. கால்நடை ஆய்வாளர் மாசிலாமணி வரவேற்றார். மருத்துவ அலுவலர் பூங்குழலி முன் னிலையில் ஊராட்சி தலைவர் குலசேகர் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சுற்றுப்பகுதி பொதுமக்கள் பங்கேற்றனர். துவக்க நாளில் 75க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior