உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 26, 2010

திருத்துறையூர் ஊராட்சியில் பூட்டிக் கிடக்கும் நூலகம்

பண்ருட்டி : 

              பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் ஊராட்சியில் நூலக கட்டடம் பூட்டி கிடக்கிறது.
 
                 பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் ஊராட்சியில் கடந்த 2006-07ம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நூலகம் அமைக்கப்பட்டது. நூலகம் காலை 8 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்து இருக்க வேண்டும்.  ஆனால் வாரத்தில் பல நாட்கள் திறக்கப் படாமல் பூட்டியே இருக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் தற்போது பள்ளி விடுமுறை விடப் பட்டுள்ளதால் நூலகத்தில் நூல்கள், செய்தித்தாள் படிக்க முடியாமல் பள்ளி மாணவ, மாணவிகள் அவதியடைந்து வருகின்றனர். இதற்கு ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ., மற்றும் ஊராட்சி தலைவர் நூலகம் குறிப்பிட்ட நேரத்தில் செயல்பட தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior