உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 26, 2010

சுடுகாட்டு பாதை பிரச்னை: ஸ்ரீமுஷ்ணத்தில் பரபரப்பு

 ஸ்ரீமுஷ்ணம் : 

                 ஸ்ரீமுஷ்ணம் அருகே பொதுமக்கள் இரவோடு இரவாக நிலத்தின் வழியே சுடுகாட்டுப்பாதையை அமைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 
                     ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த கீழ்புளியங்குடியில் பல்வேறு சமூகத்தினர் உள்ளனர். இப்பகுதி மக்களுக்கு சுடுகாட்டை சுற்றிலும் உள்ள  வயல்கள் இருப்பதால் சரியான பாதை இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். கடந்த 23ம் தேதி பிணத்தை எடுத்து செல்ல முடியாததால் அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியல் செய்தனர். இந்நிலையில் ஊராட்சி தலைவர் நவநீதகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தாமே சாலை அமைத்துக் கொள்ள முடிவு செய்தனர். நேற்று முன்தினம் இரவோடு இரவாக பூராசாமி மற்றும் சோழங்கன் ஆகியோரது நிலத்தில் மண் அடித்து சாலை போடும் பணியை மேற்கொண்டனர்.
 
                   இது குறித்து தகவல் அறிந்த நிலத்தின் உரிமையாளர்கள் ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதனையடுத்து பொதுமக்கள் சாலை அமைக்கும் பணியை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior