உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 26, 2010

பஸ் நிலையம் முன் பஸ் நிறுத்தம் வாகன ஓட்டிகள் கடும் அவதி

 விருத்தாசலம் : 

             விருத்தாசலம் பஸ் நிலையம் முன் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்வதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
 
              விருத்தாசலம் பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு கடலூர் நோக்கிச் செல்லும் பஸ்கள் ஜங்ஷன் ரோட்டின் வலது புறத்திலும், உளுந்தூர் பேட்டை நோக்கிச் செல்லும் பஸ்கள் இடது புறத்திலும் செல்லும். அதுபோல் பாலக்கரை வழியாக வேப்பூர், சேலம் சென்ற பஸ்கள் தற்போது மணலூர் அருகே ரயில்வே மேம்பால பணி நடைபெறுவதால் ஜங்ஷன் ரோடு வழியாக மாற்றுப் பாதையில் சென்று வேப்பூர் ரோட்டை அடைகிறது. இதனால் தற்போது ஜங்ஷன் ரோட்டில் போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது. பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு உளுந்தூர் பேட்டை, வேப்பூர், சேலம்  நோக்கிச் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனைத்தும் பஸ் நிலையம் முன் நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் பின்னால் வரும் வாகனங் கள் பயணிகளை ஏற்றும் பஸ்சை முந்திச்செல்ல முயலும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior