உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 26, 2010

கடையடைப்பு போராட்டத்தை ஆர்ப்பாட்டமாக அறிவிக்க கோரிக்கை


பண்ருட்டி ; 

              கடையடைப்பு போராட்டத்தை அரசியல் கட்சிகள் மறு பரசீலனை செய்ய வேண்டும் என மாவட்ட தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
 
இதுகுறித்து சங்கத் தலைவர் சண்முகம்,  செயலாளர் வீரப்பன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: 

                விலைவாசி உயர்வு, மின்தட்டுப்பாட்டை கண்டித்து அரசியல் கட்சிகள் நாளை 27ம் தேதி நடத்த உள்ள கடையடைப்பு போராட்டத்தை கட்சிகள் மறு பரிசீலனை செய்ய வேண்டும். போராட்டம், ஆர்ப்பாட்டம் செய்தால் போதுமானது. வரும் 1ம் தேதி தொழிலாளர் தினம், அதனைத் தொடர்ந்து  மே 5ம் தேதி வணிகர் தின மாநாடு திருச்சியில் நடக்கிறது. அப்போதும் கடைகளுக்கு முழு விடுமுறை அளித்து மாநாட்டில் பங்குபெற வேண்டிய நிலை உள்ளது. எனவே, ஏப்ரல் 27, மே 1 மற்றும் 5ம் தேதி என மூன்று நாட்கள் வணிக தொழில் நிறுவனங்களை மூடினால் பொதுமக்களும் பாதிப்படைவார்கள். எனவே, நாளை 27ம் தேதி நடத்த உள்ள கடையடைப்பு குறித்து மறு பரிசீலனை செய்து பொதுமக்கள் நலன் கருதி போராட்டமாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior