உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 26, 2010

பந்த்: பஸ், ரயில்கள் ஓடும் - அரசு




          தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள செவ்வாய்க்கிழமையன்று (ஏப். 27), வழக்கம்போல் பஸ், ரயில்கள் ஓடும் என்று மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

            பந்த் அன்று அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாத வகையில் பஸ் நிலையம் உள்பட பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்று சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் டி. ராஜேந்திரன் தெரிவித்தார். விலைவாசி உயர்வைக் கண்டித்து ஏப்ரல் 27-ம் தேதி, நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. தமிழகத்தில் அதிமுக தலைமையில், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், பார்வர்டு பிளாக் கட்சிகள் பொது வேலை நிறுத்தத்தை நடத்த உள்ளன. 
 
பஸ், ரயில்கள் ஓடும்: 
 
                  இந்த நிலையில் பந்த் தினத்தன்று தமிழகத்தில் வழக்கம்போல் பஸ்கள் அனைத்தும் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறினார். சென்னையிலிருந்து மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்களும், மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சென்னைக்குள் இயக்கப்படும் பஸ்களும் எந்தவித பாதிப்பும் இன்றி வழக்கம்போல் இயக்கப்படும் என்ற அத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோல் ரயில்களும் வழக்கம்போல் இயங்கும் என்று அத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
 
முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு: 
 
              பந்த் அன்று மாநகரில் முக்கிய இடங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறினார். கடைகள் திறந்திருக்கும்: இந்த பொது வேலை நிறுத்தத்தில் ஏராளமான வணிகர் சங்கங்கள் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளன. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, தமிழக அனைத்து வணிகர்கள் சங்கம், தமிழக வணிகர்கள் முன்னேற்ற சங்கம், தமிழக வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள், பந்த்தில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளன. இதனால், சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கடைகளும், வணிக நிறுவனங்களும் வழக்கம்போல் திறந்திருக்கும் எனத் தெரிகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior