உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 26, 2010

வளர் இளம்பருவ திட்ட தொண்டர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


கடலூர் : 

            நேரு யுவகேந்திரா வளர் இளம் பருவ  திட்ட தொண்டர் பணிக்கு விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகிறது.
 
                நேரு யுவகேந்திரா கடலூர் மாவட்ட  அலுவலகத்திற்கு வளர் இளம் பருவத்தினர் நலம் மற்றும் மேம்பாட்டு  திட்டத்தின் கீழ் புவனகிரி மற்றும் நல்லூர் ஒன்றியங்களில்  திட்ட பணிக்கு தொண்டர்கள்  நியமிக்க  உள்ளனர். இந்த  பணிக்கு 30 வயதுக்குட்பட்ட  பட்டப் படிப்பு முடித்த ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து  விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகிறது.
 
                   அந்தபகுதியைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்வு  செய்யப்படுவர்களுக்கு   மாதம் 3,000 ரூபாய் ஊக்கத்தொகை  வழங்கப்படும். விருப்பம்  உள்ளவர்கள்  தக்க சான்றுகளுடன் பூர்த்தி  செய்யப்பட்ட விண்ணப்பங்களை  ஏப்ரல் 30ம் தேதி மாலை 5 மணிக்குள் நேரு யுவகேந்திரா, 34, ராமதாஸ் தெரு, புதுப்பாளையம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior