உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 26, 2010

வாகனம் மோதி இருவர் சாவு


பரங்கிப்பேட்டை : 

               அடையாளம் தெரியாத வாகனம் இருவர் இறந்தனர். பரங்கிப்பேட்டை அடுத்த வேளங்கிப்பட்டைச் சேர்ந்தவர் செல்வராஜ் (48). இவரும் கொத்தட் டையைச் சேர்ந்த சதாசிவமும் (39). நேற்று முன்தினம் பைக்கில் சொந்த வேலையாக கொத்தட்டையில் இருந்து பு.முட்லூருக்கு சென்றனர். சம்மந்தம் அருகே வரும் போது பின்னால் அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பைக்கில் பின்னால் உட்கார்ந்து சென்ற சதாசிவம் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
 
பண்ருட்டி: 

                       தெற்கு சாத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தன் (82). இவர் நேற்று காலை சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை பனிக்கன்குப்பம் முந்திரி கம்பெனி அருகில் சாத்திப்பட்டு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது  பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கந்தன் சம்பவ இடத்தில் இறந்தார். இதுகுறித்து பரங்கிப்பேட்டை மற்றும் காடாம் புலியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior