உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 26, 2010

கவரிங் நகை திருட்டு: 3 பெண்கள் கைது

 புவனகிரி : 

                   புவனகிரி அருகே கவரிங் கடையில் 8,000 ரூபாய் மதிப்புள்ள கவரிங் நகை திருடிய மூன்று பெண்களை போலீசார் கைது செய்தனர்.
 
                    புவனகிரி கடைவீதியில் அண்ணாமலையார் கோல்டு கவரிங் மற்றும் கட்பீஸ் சென்டர் உள்ளது.  நேற்று முன்தினம் மாலை ஜெயங்கொண்டம் அடுத்த தண்டலை கிராமத்தைச் சேர்ந்த அருமைராஜ் மனைவி கற்பகம் (35),செல்வம் மனைவி லலிதா (40) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அன்பழகி (40) ஆகியோர் கோல்டு கவரிங் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்குவது போல் நடித்து அங்கிருந்த 8,000 ரூபாய் மதிப்புள்ள 11 கவரிங் செயின்கள், 13 ஜோடி வளையல்கள், 4 ஜாக்கெட் பீஸ் துணி ரோல் மற்றும் 3 பூனம் புடவைகளை திருடினர். கடை உரிமையாளர் கணேசன் மூவரையும் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தார். மேலும் இதுகுறித்து புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து மூன்று பேரையும் கைது செய்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior