உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 26, 2010

குத்துச்சண்டை போட்டி: தமிழக வீரர் முதலிடம்

 கடலூர்: 

                தமிழ்நாடு தொழில்முறை குத்துச்சண்டை சங்கம் சார்பில், தென்னிந்திய அளவிலான குத்துச்சண்டை போட்டி கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது. சங்கத் தலைவர்  மாரிமுத்து  தலைமை தாங்கினார்.  புதுச்சேரி பல்கலைக் கழக  விளையாட்டு அலுவலர் சந்திரசேகர் துவக்கி வைத்தார். போட்டியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த 20 வீரர்கள் பங்கேற்றனர். இதில், 10 பிரிவுகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன. ஹெவி வெயிட் சாம்பியன் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த அக்பர் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றவர்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம், கடலூர் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் ஆகியோர் கேடயங்கள் வழங்கினர். பரிசளிப்பு விழாவில், தமிழ்நாடு தொழில்முறை குத்துச் சண்டை சங்க துணைச் செயலர் கிரிஸ்டோபர், பொதுச் செயலர் மகேஷ்பாபு, துணைத் தலைவர் ஸ்ரீதர்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior