உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 08, 2010

தமிழகத்தில் ரூ.10 ஆயிரம் கோடியில் சாலைப் பணி நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பெருமிதம்


சிதம்பரம்:

                  தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 55 ஆயிரத்து 785 கிலோ மீட்டர் தூர சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக் கோவில் சாமிநாதன் பேசினார்.

காட்டுமன்னார்கோவிலில் நடந்த விழாவில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக் கோவில் சாமிநாதன் பேசியதாவது:

                           தமிழகத்தில் ஐந்தாவது முறையாக பொறுப்பேற்ற தி.மு.க., அரசு தமிழகத்தில் பாலங்கள், சாலைப்பணிகள் என வரலாற்று சாதனைகளை செய்துள்ளது.  61 ஆயிரத்து 461 கி.மீ., சாலைகள் பராமரிப்பு, அகலப்படுத்துதல், உறுதிபடுத்தும் பணிகள் நடந்து வருகிறது. ஆட்சி பொறுப்பேற்ற முதல் கடந்த மாதம் வரை 10 ஆயிரம் கோடி ரூபாயில் 55 ஆயிரத்து 785 கி.மீ., சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
                          ரயில்வே அனுமதியுடன் 106 ரயில்வே மேம்பாலங்களுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஐந்தாண்டு அ.தி.மு.க., ஆட்சியில் ஏழு ரயில்வே பாலங்கள் மட்டுமே அனுமதி பெறப்பட்டன. தமிழக அரசு பாலம் கட்ட 50 சதவீத பங்கு ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையோடு ரயில்வே பாலங்கள் அனுமதி வழங்கி வருகிறது. தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டு இதுவரை 2,400க்கும் மேற்பட்ட பாலங்கள் முடிக்கப்பட்டு விட்டன.

                     அணைக்கரை பாலம் பொதுப்பணித்துறையின் குடிநீர் தேக்குவதற்கான மதகு. அதை நாம் போக்குவரத்து பாலமாக பயன்படுத்தி வந் தோம். தற்போது அந்த பாலம் உடைந்ததால் போக்குவரத்து நிறுத் தப்பட்டுள்ளது. அதையொட்டி ஈழத் தநல்லூர் அருகே கொள்ளிடத்தின் குறுக்கே 33 கோடி ரூபாயில் பாலம் கட்டும் பணி துவங்கியுள்ளது. 18 மாதங்களில் இந்த பணி முடிக்கப்படும்.
                       அதே போன்று அங்கிருந்து 20 கி. மீட்டர் இடைவெளியில் முட்டம்- மணல்மேடு இடையே கொள்ளிடம் ஆற்றில் 48.85 கோடி ரூபாயில் பாலம் கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. இரு பால பணிகளும் முடிவடைந்தால் தென்மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். அத்துடன் வியாபாரம், தொழில்வளம் பெருகும், வேலை வாய்ப்பு ஏற்படும் இப்படி பயனுள்ள பல திட்டங்களின் புகழ் அத்தனையும் தமிழக முதல்வர் கருணாநிதியையே சாரும். இவ்வாறு அமைச்சர் சாமிநாதன் பேசினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior