உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 08, 2010

உளுந்துப் பயிருக்கு வீராணம் நீர் திறப்பு

கடலூர்:

               கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் உளுந்துப் பயிருக்கு வீராணம் ஏரியில் இருந்து வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடப்படப்பட இருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பாசனப் பகுதிகள் 1.5 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்படுகிறது. சம்பா நெல் அறுவடைக்கு 10 தினங்களுக்கு முன், வயல்களில் ஊடுபயிராக உளுந்து விதைத்து விடுவார்கள். வயலில் உள்ள ஈரப்பதத்திலும், பனியிலும் 90 நாள்களில் விளைந்து அறுவடைக்குத் தயாராகி விடும் உளுந்து. இந்த ஆண்டு சம்பா பயிருக்கு காவிரி நீர் தாமதமாகக் கிடைத்ததாலும், உளுந்து விதை, தேவையான அளவுக்கு கிடைக்காததாலும், 70 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே உளுந்து விதைக்கப்பட்டு உள்ளது. அண்மையில்தான் டி-9 உளுந்து விதையை, வேளாண் துறை தருவித்து வேளாண் விரிவாக்க மையங்களில் விற்பனைக்கு வைத்து உள்ளது. வழக்கம்போல் மேட்டூர் அணை ஜனவரி 28-ம் தேதியுடன் பாசனத்துக்கு மூடப்பட்டு விட்டது. வீராணம் ஏரியின் அனைத்து பாசன வாய்க்கால்களும் மூடப்பட்டு விட்டன. எனவே தற்போது பயிரிடப்பட்டு 30 முதல் 40  நாள்கள் ஆகி இருக்கும் உளுந்து பயிருக்கும், புதிதாக உளுந்து விதைக்க விரும்பும் விவசாயிகளுக்கும், வீராணம் ஏரி நீர் விட்டு விட்டு 3 நாள்கள்கள் வழங்கினால், உளுந்து உற்பத்தியை பெருக்க முடியும் என்று விவசாயிகள் அரசுக்குத் தெரிவித்து இருந்தனர். விவசாயிகளின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டு இருப்பதாக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் கடலூர் மாவட்ட அமைப்புச் செயலாளர் பி.ரவீந்திரன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். 

விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் கடலூர் மாவட்ட அமைப்புச் செயலாளர் பி.ரவீந்திரன்  கூறியது: 

                உளுந்துப் பயிருக்கு  வீராணம் ஏரி நீர் வழங்துவது குறித்து, பொதுப் பணித்துறை அதிகாரிகள் விவாதித்தனர். அந்தந்த பகுதி விவசாயிகளின் கோரிக்கைக்கு இணங்க, வாய்க்கால்களில் 20 கன அடி நீர் திறக்க சம்மதித்து இருக்கிறார்கள். இதன் மூலம் முக்கிய வாய்க்கால்களில் தண்ணிரைத் தேக்கி வைத்து, அதில் இருந்து தேவைப்படும் நீரை விவசாயிகள் எடுத்து, டி.ஏ.பி. நுண்ணூட்டச் சத்துக் கரைசலை, கைத் தெளிப்பான்கள் மூலம் தெளிக்க வசதியாக இருக்கும். இதனால் உளுந்து மகசூல் அதிகரிக்க வாய்ப்பு ஏறப்பட்டு உள்ளது. டி.ஏ.பி. உரம் 50 சதவீதம் மானிய விலையில் மத்திய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில் வழங்கப்படுகிறது. புதிதாக உளுந்து பயிரிடுவோரும், இந்த நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தினால் 40 ஆயிரம் ஏக்கரில் உளுந்து பயிரிட்டு, நல்ல மகசூலைப் பெறமுடியும். விவசாயிகள் தங்கள் பகுதி பொதுப் பணித் துறை அலுவலர்களை அணுகி தண்ணீரைக் கேட்டுப் பெற்று, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் ரவீந்திரன்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior