உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 08, 2010

.குழாய் மூலம் பாலம்: கிராம மக்கள் எதிர்ப்பு

பரங்கிப்பேட்டை:

               பரங்கிப்பேட்டை அருகே நெடுஞ்சாலைத்துறை சாலையில் குழாய் மூலம் பாலம் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் தீயணைப்பு துறை அலுவலகம் எதிரே நெடுஞ்சாலைத்துறை சாலையில் பழைய பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டுவதற்கு நேற்று முன்தினம் பள்ளம் தோண்டப்பட்டது.

                   நேற்று குழாய் பதிக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடந்தது. இதனால் அகரம் மெயின்ரோடு, புதுப்பேட்டை மண்டப தெரு மற்றும் தேரோடும் வடக்கு வீதியை சேர்ந்த பொதுமக்கள் பாலம் கட்டும் இடத்திற்கு சென்று பழைய பாலம் போல் கட்ட வேண்டும். குழாய் பதித்து பாலம் கட்டினால் மழை, வெள்ள காலங்களில் தண்ணீர் வடியாமல் போய்விடும். அதனால் இந்த பகுதி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior