உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 08, 2010

முந்திரியில் தேயிலை கொசுவை கட்டுப்படுத்த வழிமுறை வேளாண் அறிவியல் நிலைய தலைவர் சாத்தையா தகவல்

விருத்தாசலம்:

             முந்திரி மரங்களை தாக் ககூடிய தேயிலை கொசுவை கட்டுப்படுத்தினால் விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம் என வேளாண் அறிவியல் நிலைய தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் சாத் தையா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

               முந்திரி மரங்களை தாக்கக்கூடிய பூச்சிகளில் தேயிலை கொசுவும் ஒன்றாகும். இத் தேயிலை கொசு முந்திரி மரத்தில் இளந்தளிர், பூங்கொத்து மற்றும் பிஞ்சு உருவாகும் பருவங்களில் தாக்கி சேதம் விளைவித்து அதிக அளவில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும். எனவே இப்பூச்சியின் தாக்கத்தை அறிந்து கட்டுப்படுத்துவது இன்றியமையாதது. எனவே முந்திரி பூக்கும் பருவத்தில் ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மி.லி., எண் டோசல்பான் 35 இ.சி., அல்லது குளோர்பைரிபாஸ் 20 இ.சி., மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 2.5 மி.லி., என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும்.
                மேலும் பூக்கள் கொட்டுவதை தடுக்க மருந்தோடு லிட்டருக்கு 2-3 கிராம் என்ற அளவில் யூரியாவை பயன்படுத்தலாம். இது தவிர புரோபினோபாஸ் மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1.5 மி.லி., என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும். முந்திரி பிஞ்சுவிடும் பருவத்தில் இப்பூச்சியை கட்டுப்படுத்த கார்பரில் 50 சத நனையும் தூள் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் வீதம் கரைத்து தெளித்திட வேண்டும். இவ்வாறு செய்தால் முந்திரியில் தேயிலை கொசுவை கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior