உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 08, 2010

மத்திய அமைச்சர் பாதுகாப்புக்கு வந்த போலீசார் ரகளை : கார் கண்ணாடி உடைப்பு; டிரைவர்கள் தாக்கு

சிதம்பரம்:

                   சிதம்பரத்தில் மத்திய அமைச்சர் பாதுகாப்புக்கு வந்த போலீசார், துப்பாக்கியால் அடித்து கார் கண்ணாடியை உடைத்து, டிரைவர்களை தாக கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது . புதுச்சேரியை சேர்ந்த மத்திய அமைச்சர் நாராயணசாமி நேற்று காலை கடலூர் வழியாக காரைக்கால் சென்றார்.
                  அவருக்கு கடலூர் மாவட்ட எல்லையில் இருந்து கடலூர் மாவட்ட போலீசார் சுமோவில் பாதுகாப்புக்குச் சென்றனர். சிதம்பரம் - சீர்காழி சாலையில் நந்தனார் பள்ளி அருகே அமைச்சரின் கார் முன்னால் சென்ற அம்பாசிடர் காரை "ஓவர்டேக்' செய்துக் கொண்டு சென்றது. அமைச்சரின் காரை தொடர்ந்து பாதுகாப்பு போலீசாரின் சுமோ கார், அம் பாசிடர் காரை முந்திச் செல்ல முயன்றபோது எதிரில் வந்த மகேந்திரா ஜீப் மீது மோதியது. அதில், போலீசார் சென்ற சுமோவின் முன்பகுதி சேதமடைந்தது.

                  ஆத்திரமடைந்த அமைச்சரின் பாதுகாப்பிற்கு வந்த போலீசார் சுமோவிலிருந்து இறங்கி, நீ வழி கொடுக்காததால் தான் விபத்து நடந்ததாக கூறி தனக்கு முன்னாள் சென்ற அம்பாசிடர் கார் கண்ணாடியை துப்பாக்கி கட்டையால் அடித்து உடைத்தனர். டிரைவர் வைரக் கண்ணுவை தாக்கினர். அப்போது அந்த வழியாக கர்ப்பிணி பெண்ணை ஏற்றி வந்த மற்றொரு அம்பாசிடர் கார் டிரைவர் கோவிலாம்பூண்டி இஸ்மாயில், மக்கள் கூட்டம் இருக்கவே "ஹாரன் அடித்தார்.
              ஆத்திரமடைந்த போலீசார், டிரைவர் இஸ்மாயிலையும் தாக்கினர். காரில் இருந்த கர்ப்பிணி பெண் ரூபா அலறினார். போலீசாரின் ரகளையைக் கண்டு ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், காரில் வந்த கர்ப்பிணி பெண்ணை வேறு காரில் அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., மூவேந்தன் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்தார். மத்திய அமைச்சரின் பாதுகாப்புக்கு வந்த போலீசாரின் இந்த ரகளை சம்பவம் சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior