உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 08, 2010

அரசு கல்லூரியில் ஆக்கிரமிப்பை அகற்ற மக்கள் மைய பொதுக்குழு வலியுறுத்தல்

விருத்தாசலம்:

                விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரி இடத்தில்உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் மையம் கோரிக்கை விடுத்துள்ளது. விருத்தாசலத்தில் மக்கள் மைய பொதுக்குழு கூட்டம் நடந்தது. முன்னாள் ஆர்.டி.ஓ., முத்தையா தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ராமசாமி வரவேற்றார்.

            கூட்டத்தில் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரிக்கு சொந்தமான 45 ஏக்கர் நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து வருவதால் அரசு தலையிட்டு கல்லூரிக்கான நிலத்தை பாதுகாக்க வேண்டும்.
                  தற்போது கோடைகாலம் துவங்கிவிட்ட நிலையில் மழைகாலங்களில் தண்ணீர் தேக்கி விவசாயத்திற்கு பெருமளவில் பயன்படும் வகையில் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வாரி சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior