உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 08, 2010

பணி நிரந்தரம் செய்யக்கோரி கம்ப்யூட்டர் ஊழியர்கள் மனு

கடலூர்:

               கம்ப்யூட்டர் விவர பதிவு ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி துணை முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் கம்ப்யூட்டர் ஊழியர்கள் துணை முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனு:

                    கம்ப்யூட்டர் விவர பதிவு ஊழியர்களாக பணி நியமனம் செய்யப்பட்ட நாங்கள் கடந்த ஐந்தாண்டு காலம் தொடர்ந்து அதே நிலையில் இருந்து வருகிறோம். எங்களை நியமனம் செய்த நாளிலிருந்து இதுவரை பணி நிரந்தரம் செய்யாமலும் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கக் கூடிய சலுகைகளான பணிப்புத்தகம் பராமரிப்பு, விடுப்பு சலுகை, மருத்துவ காப்பீடு மற்றும் பிற சலுகைகள் கிடைக்க பெறாமலேயே பணிபுரிந்து வருகிறோம்.
                 திடீரென எங்களுக்கு உயிரிழப்பு நேரிடின் எங்கள் குடும்பத்திற்கு எவ்வித சலுகைகளும் பெற முடியாத சூழ்நிலையில் உள்ளோம். எனவே எங்கள் மீது கருணை கூர்ந்து நியாயமான சலுகைகள் கிடைக்கவும், பணி நிரந்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior