உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 08, 2010

அழைப்பிதழ் அச்சடித்த தொகையை கேட்டு சென்னை நிறுவனம் கலெக்டருக்கு கடிதம்

கடலூர்:

                   நெல்லிக்குப்பம் பஸ் நிலைய திறப்பு விழாவிற்கு அழைப்பிதழ் அச்சடித்த தொகை 87 ஆயிரம் ரூபாய் கேட்டு சென்னை நிறுவனம் கலெக்டருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. கடலூர் மாவட்டம், நெல்லிக் குப்பம் நகராட்சி புதிய பஸ் நிலையம் கட்டட திறப்பு விழா 2008 அக்டோபர் 24ம் தேதி காராமணிக் குப்பத்தில் நடந்தது.

                  துணை முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற விழா என்பதால், சிறப்பாக அழைப்பிதழை அச்சடிக்க சென்னையில் உள்ள "என்த்ரால்' நிறுவனத் திடம் பணி ஒப்படைக்கப்பட்டது. அதற்கான தொகை 87 ஆயிரம் ரூபாயை இதுவரை கொடுக்கவில்லை. பொறுத்துப் பார்த்த "என்த்ரால்' நிறுவனம் கடன் பாக்கியை கேட்டு கலெக்டர் சீத்தாராமனுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
                 தகவலறிந்த கலெக்டர் நடந்தது என்ன என்பது குறித்து முழு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். பஸ் நிலைய திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்த துறையினர் இதுவரை அதற்கான தொகை செலுத்தாமல் உள்ளார்களா அல்லது தொகை செலுத்தி வரவு வைக்கப்படாமல் உள்ளதா அல்லது பொறுப்பில் இருந்த பி.ஆர்.ஓ., தொகையை செலுத்தாமல் கைவரிசையைக் காட்டினாரா என்பது விசாரணையில் தெரியவரும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior