உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 08, 2010

நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் : தலைமை பொறியாளர் பாலாஜி பேட்டி

திட்டக்குடி:

               விருத்தாசலம் - ராமநத்தம் நெடுஞ்சாலை 19.5 கோடி ரூபாய் செலவில் அகலப்படுத்தும் பணி விரைவில் துவங்கப்படும் என நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர் பாலாஜி கூறினார். கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே முருகன்குடி வெள்ளாற்றில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணியை நெடுஞ்சாலைத்துறை சென்னை மண்டல தலைமை பொறியாளர் பாலாஜி ஆய்வு செய்தார்.

            பணியை துரிதமாகவும், தரமாகவும் செய்ய வேண்டுமென அதிகாரிகள் மற்றும் கட்டுமான நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

பின்னர் அவர் கூறியதாவது:

           மேம்பாலம் கட்டும் பணியால் போக்கு வரத்து பாதிக்காமல் இருக்க தற்காலிக மாற்றுப்பாதை விரைந்து அமைக்கப்படும். வெள்ளாற்றில் தண்ணீர் வரத்து அதிகமான இடத்தில் கூடுதலாக சிமென்ட் பைப்கள் வைக்கவும், பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்றுவர மாற்றுப்பாதை தரமாக கட்ட உத்தரவிட்டுள்ளேன்.
                வரும் 2011 மே மாத இறுதிக்குள் தரைப் பாலங்கள் மேம்பாலங்களாக தரம் உயர்த்தி திறப்பு விழாவிற்கு தயாராகி விடும்.இறையூர் ரயில்வே கேட் மேம்பாலம் அமைக்கும் பணியின்போது, குறிப்பிட்ட பகுதிகளிலுள்ள வீடுகள் அகற்ற வேண் டும். இதில் பட்டா உள்ள வீடுகளுக்கு மாற்று இடத்தில் பட்டாவுடன் நிலம் வழங்கப்படும். புறம்போக்கில் குடியிருப்போருக்கு நிலம் வழங்கிட வருவாய்த்துறையினர் பரிசீலிக்க வேண்டும்.

                பெண்ணாடம் நகர்ப்பகுதியில் சாலையினை அகலப்படுத்தும் பணி வரும் 13ம் தேதி துவங்குகிறது. நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்படும். உலக வங்கி நிதியுதவி திட்டத்தில் விருத்தாசலம்- ராமநத்தம் நெடுஞ்சாலையினை அகலப்படுத் திட 19.5 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கப்படவுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

                  ஆய்வின்போது, விழுப்புரம் கண்காணிப்பு பொறியாளர் இளங்கோவன், கடலூர் மண்டல பொறியாளர் வெங்கடேசன், விருத்தாசலம் உதவி செயற்பொறியாளர் வெள்ளிவேல், உதவி பொறியாளர் கலையரசி, கட்டுமான பொறியாளர் முகமது உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior