உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 08, 2010

கார் கவிழ்ந்து நால்வர் காயம்

சிறுபாக்கம்:

           சாலை தடுப்பு கட்டையில் கார் மோதி கவிழ்ந்ததில் நான்கு பேர் படுகாயமடந்தனர். சென்னையை சேர்ந்த பீட்டர்காவு (70). இவர் தனது உறவினர்களான அனில்காவு (55), லில்லிகாவு (70) ஆகியோருடன் நேற்று முன்தினம் காரில் திருச்சிக்கு சென்று கொண்டிருந்தார்.

                   காரை சிவகங்கையை சேர்ந்த செந்தில்வேல் (26) ஓட்டி வந்தார். வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் புல்லூர் கைகாட்டி அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக கார், சாலை தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது. அதில் பீட்டர்காவு உள்ளிட்ட நான்கு பேரும் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திட்டக்குடி: 

              பெண்ணாடத்தை சேர்ந்தவர் சண்முகம் (55). சம்பவத்தன்று ரோட்டில் நடந்து சென்றபோது திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ் மோதியது. அதில் படுகாயமடைந்த சண்முகம் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior