உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 08, 2010

சாலையை சீரமைக்க வேண்டும் அரசுக்கு பா.ஜ., கோரிக்கை

சேத்தியாத்தோப்பு:

                  சேத்தியாத்தோப்பு - விருத்தாசலம் சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க தமிழகஅரசுக்கு பா.ஜ., கோரிக்கை விடுத்துள்ளது. 

இதுகுறித்து சேத்தியாத்தோப்பு நகர பா.ஜ. செயலாளர் பன்னீர்செல்வம் முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப் பியுள்ள மனு:

                 சேத்தியாத்தோப்பிலிருந்து கம்மாபுரம் வழியாக விருத்தாசலம் செல்லும் சாலை பெரும்பாலான இடங்களில் சிதைந்து சின்னாபின்னமாகி உள்ளது. சில இடங்களில் பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. தினசரி நூற்றுக்கணக்கான பஸ்களில் பயணம் செய்யும் மக்கள் சாலை சீர்கேட்டால் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
                 சாலை நெடுகிலும் பெயர்ந்து கிடக்கும் கற்களால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்திற்கு உள்ளாகி வருகின்றனர். விருத்தாசலத்திலிருந்து ஒரு மணிநேரத்தில் சேத்தியாத்தோப்பிற்கு பயணிக்க வேண்டிய பொதுமக்கள் ஒன்னரை மணிநேரம் பயணம் செய்யக்கூடிய நிலை உள்ளது. எனவே சேத்தியாத்தோப்பு - விருத்தாசலம் சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior