உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 08, 2010

விலைவாசி உயர்வுக்கு மருந்து விற்பனை பிரதிநிதிகள் கண்டனம்

கடலூர்:

                      விலைவாசி உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்து, கடலூர் மாவட்ட மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்க ஆண்டு பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டம் கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. தனியார் நிறுவனத்தின் தொழிற்சங்க விரோத நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஆர். பாலகணேஷ் தலைமை தாங்கினார். சரவணன் வரவேற்றார். மாவட்டச் செயலர் ஆர்.எஸ். ராமசாமி வேலை அறிக்கை சமர்ப்பித்தார். சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வெங்கடேசன், சி.ஐ.டி.யூ. மாவட்டத் தலைவர் கருப்பையன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். சங்கத்துக்கு மாவட்டத் தலைவராக பாலகணேஷ், செயலராக ராமசாமி உள்ளிட்ட 10 பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior