உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 08, 2010

தபால் நிலையம் அமைக்கஇடம் வழங்க கோரிக்கை

சிதம்பரம்:

            சிதம்பரம் மேற்குபகுதியில் தபால் நிலையம் மீண்டும் அமைக்க இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து முன்னாள் மாவட்ட தி.மு.க., இலக்கிய அணி புரவலர் கண்ணதாசன் கலெக்டருக்கு அணுப்பியுள்ள மனு:

                சிதம்பரம் லால்கான் தெருவில் தனியார் இடத்தில் வாடகைக்கு கடந்த 100 ஆண்டுகளாக தபால் நிலையம் இயங்கியது. சொந்த இடத்தில் தபால் நிலையம் அமைக்க தபால் துறை நிர்வாகம் வாங்கிய இடத்தில் வில்லங்கம் இருப்பதால் தபால் நிலையம் அமைக்க முடிய வில்லை. மேலும் வாடகை இடத்தில் இயங்கிய இடம் காலி செய் யப் பட்டதால், தற்போது தலைமை தபால் நிலையத்தில் கச்சேரி தபால் நிலையம் இயங்கி வருகிறது. இதனால் சிதம்பரம் மேற்கு பகுதிமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
                  எனவே சிதம்பரம் ஆர்.டி.ஓ,. அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலக கட்டடத்தில் காலியாக உள்ள இடத்தில் தபால் நிலையம் மீண்டும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior