உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 08, 2010

திருச்சோபுரம் சுகாதார நிலையம்தரம் உயர்த்தப்படும்: அமைச்சர்

கடலூர்:

                திருச்சோபுரத்தில் 24 மணிநேரமும் இயங்கும் தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார். கடலூர் காயல்பட்டு அடுத்த பேட்டோடை கிராமத்தில் பகுதிநேர ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. இணைப்பதிவாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

              துணைப் பதிவாளர் (பொது வினியோகத் திட்டம்) மகபூப் பாஷா வரவேற்றார்.மாவட்ட கவுன்சிலர் செந்தில்குமார், காயல்பட்டு ஊராட்சி தலைவர் ராதிகா, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 ரேஷன் கடையை திறந்து வைத்து அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில் 

                   "இந்த பகுதிநேர கடை செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் இயங்கும். 250 ரேஷன் கார்டுதாரர்கள் பயன்பெறுவர்.

               உயர்மட்ட கோபுர விளக்கு அமைத்தல் மற்றும் 4 லட்சம் ரூபாய் செலவில் சிறுவர் பூங்கா அமைத்து தர எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்படும். திருச்சோபுரத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என பேசினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior