உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 08, 2010

டாஸ்மாக் கடை முன் மறியல் : மனித நேய மக்கள் கட்சியினர் கைது

சிதம்பரம் : 

                   சிதம்பரத்தில் மறியலில் ஈடுபட்ட மனித நேய மக்கள் கட்சியினர் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
                டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி மனித நேய மக்கள் கட்சி சார்பில் சிதம் பரம் லால்கான் தெரு டாஸ்மாக் கடை முன்பு மறியல் போராட்டம் நடந்தது.  த.மு.மு.க., மாவட்ட பொருளாளர் அமீர்பாஷா தலைமை தாங்கினார். மனித நேய மக்கள் கட்சி நகர பொருளாளர் ஜமால் உசேன், நகர செயலாளர் அல்தாப் உசேன், இஸ்மாயில் முன்னிலை வகித்தனர்.  த.மு.மு.க., மாவட்ட செயலாளர் ஷேக்தாவூத், துணை செயலாளர் மன்சூர், மருத்துவ அணி மகபூப் உசேன் கண்டன உரையாற்றினர். மறியலில் ஈடுபட்ட 120 பெண்கள் உட் பட 300 பேரை போலீசார் கைது செய்தனர்.
 
விருத்தாசலம்: 

                    பாலக்கரையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் அகமத் தலைமை தாங்கினார். நகர நிர்வாகிகள் நிஜாமுதீன், முஜிபுர் ரகுமான், முகமது உசேன், சர்புதீன் முன்னிலை வகித்தனர். நெய்வேலி நகர செயலா ளர் ஜாபர் அலி ஆர்ப் பாட் டம் குறித்து பேசினார். மாநில கொள்கை விளக்க பேச்சாளர்  தெய்மியா, மாதர்ஷா, நவாப் பள்ளி செயலாளர் முகமது முஸ்தபா, நகர செயலாளர் அப்துல்ஹக்கீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior