உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 08, 2010

உலக மகளிர் தின விழா

நெய்வேலி:

                    நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரியில் உலக மகளிர் தினவிழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம், என்எஸ்எஸ் பிரிவு 12 மற்றும் நெய்வேலி வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் நடைபெற்ற மகளிர் தினவிழாவுக்கு கல்லூரி முதல்வர் அரங்கராசன் தலைமை வகித்தார். பேராசிரியர் கிப்ட் கிறிஸ்டோபர் வரவேற்றார். மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நடுவர் ஜி.எம்.வசந்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். பேராசிரியர் விவேகானந்தன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். பேராசிரியர் எஸ்.தியாகராஜன் நன்றி கூறினார். விழாவில் கல்லூரிப் பேராசிரியர்கள் உட்பட 200 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior