உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 08, 2010

கார்குடல் தீ விபத்து அரிமா சங்கம் நிவாரணம்

விருத்தாசலம்:

               தீ விபத்தில் வீடிழந்தவர்களுக்கு அரிமா சங்கம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஜெயராமன், ராதாகிருஷ்ணன், ஆதிமூலம் ஆகியோரின் வீடுகள் எரிந்து சாம்பலாயின.
 
              இதில் உடமைகளை இழந்து பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களுக்கு அரிமா சங்கம் சார்பில் அரிசி, வேட்டி, சேலை, மளிகை பொருட்கள், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.அரிமா சங்க வட்டார தலைவர் சுரேஷ்சந்த், தலைவர் அருணாசலம், செயலாளர் ராதாகிருஷ் ணன், துரைராஜ், முன்னாள் ஊராட்சி தலைவர் குறிஞ்சிசெல்வம் கலந்து கொண்டனர்


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior