உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 08, 2010

சூரியகாந்தி பயிரில் அதிக லாபம் பெறும் வழிகள் : வேளாண்துணை இயக்குனர் ஆலோசனை


சிறுபாக்கம்:

           மங்களூர் ஒன்றிய விவசாயிகள் சூரியகாந்தி பயிரில் அதிக லாபம் பெற வேளாண் துறை சார்பில் ஆலோசனை தெரிவிக்கப் பட்டுள்ளது.

இது குறித்து கடலூர் வேளாண் துணை இயக்குனர் (வணிகம்) கனகவேல், விருத்தாசலம் கோட்ட அலுவலர் (வணிகம்) அமுதா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

                    மங்களூர் ஒன்றியம் மங்களூர், தொழுதூர், வேப்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் தற்போது சூரியகாந்தி பயிர் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

               எண்ணெய் வித்து பயிரான சூரியகாந்தியில் எண்ணெய் அளவு குறையாமல், தரம் கெடாமல் காக்கவும், நல்ல லாபத்தில் விற்கவும் சூரியகாந்தி பயிரின் இலைகள் பழுத்து மஞ்சள் நிறமாக மாறிய நிலையிலும், பூக்கொண்டைகள் பழுப்பு நிறமாகவும் மாறியிருந்தால் மட் டுமே அறுவடை செய்ய வேண்டும். விதைகளை சோதித்து பார்த்தால் மேல்புறம் கருமையாகவும், உட்புறம் வெள்ளை நிறமாகவும், கடினமானதாகவும் இருக் கும்.
               சூரியகாந்தியின் பூத்தலையினை மட்டும் அறுவடை செய்ய வேண்டும். பின்னர் ஒரே சீராக களத்தில் பரப்பி காயவைத்து, மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை அதனை திருப்பி விட வேண்டும்.பூத்தலைகளை அறுவடை செய்தவுடன் வெயிலில் பரப்பி காய வைக்க வேண்டும். குவித்து சேமித்தால் விதைகளை பூஞ்சானம் தாக்கி மணிகளின் தரம் பாதிக்கப்படும்.

             காய்ந்த பூக்களிலிருந்து விதைகளை பிரித்தெடுக்க கதிரடிக்கும் இயந்திரம் அல்லது தடிகள் கொண்டு அடித்து பிரிக்க வேண்டும்.பிரித்தெடுத்த நல்ல விதையுடன் கலந் துள்ள சுருங்கிய, முதிராத விதைகள், கெட்டுப் போன விதைகள், பூச்சி நோய் தாக்கிய விதைகளை தனியே பிரித்தெடுக்க வேண்டும். இவ்வாறு தரம் பிரித்து ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு கொண்டு வந்து விற்பதன் மூலம் சூரியகாந்தி பயிரில் விவசாயிகள் அதிக லாபம் பெறலாம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior